அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

Date:

பாறுக் ஷிஹான்

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (19) தலைவர் யூ.எல்எம். பைஸர்
தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.ஏ.ஜி.திலகரட்ன கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக
மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ்.ஜெகன், மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சி நிறுவக பிரதம போதனாசிரியர் பி.நரேந்திரனும், விசேட அதிதியாக
இலங்கை சுதந்திர தபால் தொழில்வல்லுனர்கள் சங்க பொதுச் செயலாளர் மஞ்சுள பெர்ணான்டோ, அகில இலங்கை தமிழ்பேசும் அஞ்சல் ஊழியர்கள் சங்க
முன்னளர் தலைவர் எஸ்.சிவநேசராஜ் ,உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மத அனுஸ்டானம், மறைந்த அங்கத்தினர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் வரவேற்புரை எம்.சி.எம். இர்பான் மேற்கொண்டார்.

கடந்த வருடாந்த பொதுக்கூட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் எம்.ஜே.எம் சல்மான் மேற்கொண்டு வருடாந்த அறிக்கை மற்றும் தீர்மானங்களை
அறிவித்தார்.

இதனை தொடர்ந்து வருடாந்த கணக்கறிக்கை பொருளாளர் யு.துஷான் சமர்ப்பித்து உரையாற்றினார். பொதுச்செயலாளரின் உரை இடம்பெற்றது.அஞ்சல்
அதிபர் கே.எப்.றிப்கா கவிதை ஒன்றினை வாசித்தார்.

சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எஸ்.எம். பைஸர் ஜே. பி தலைமையுரையுடன் காதல் கவிதை ஒன்றினையும் வாசித்தார். அங்கத்தவர்களுக்கான நேரம்
வழங்கப்பட்டது.தொடர்ந்து கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி எச்.எம்.ஏ.ஜி.திலகரட்ன பொன்னாடை மற்றும் நினைவு சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் நடப்பு வருடங்களுக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டதுடன் சங்கத்தின் UPDO NEWS எனும் செய்தி மடலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் பாடல்கள் கௌரவிப்பு நன்றியுரை என நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.இவ் வைபவத்தில் கிழக்கு
மாகாண அக்கரைப்பற்று மட்டக்களப்பு அம்பாறை அஞ்சல் அத்தியட்சகர் பிரிவிலுள்ள தபால் அதிபர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.

தொழிற் சங்கங்கள் தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் அதன் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண பிரதி
அஞ்சல் மா அதிபதி எச்.எம்.ஏ.ஜி.திலகரட்ன தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

தபால் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றார்கள்.
எனது சேவை காலத்திலும் தபால் திணைக்களத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தொழிற் சங்கங்கள் எப்போதும் முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால் தான் ஒரு வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியும் தொழிற் சங்கங்கள்
வெறுமனே போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது. எப்போதும்
நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளுக்கு எதிர்த்து போராட வேண்டும்.அந்த வகையில் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள்
சங்கம் ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு நான் பாராட்டுகின்றேன். அஞ்சல் திணைக்களத்திற்கு இத் தொழிற் சங்கம் ஒரு வழிகாட்டியாக
செயற்படும் என்பதில் ஐயமில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி...

கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகுமார் மஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்...

பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புகிறது

கிருஷ்ணகுமார் இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு...