ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆக்கத்திறன் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம்

வி.சுகிர்தகுமார் 

 புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக தேசிய ரீதியில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் முதலிடத்தை பெற்றுக்கொண்;டார்.
தேசிய ரீதியில் அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி அலரி மாளிகையில் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே இவர் விருது மற்றும் சான்றிதழ் பணப்பரிசில்கள் ஆகியன வழங்கி கௌரவிக்கப்பட்டார்;.  
தேசிய ரீதியில் இடம்பெற்ற கவிதைப்போட்டியிலேயே இவர் முதலிடத்தை பெற்றுக்கொண்டதன்; மூலம் தாம் பிறந்த அன்னமலை மண்ணிற்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கும் பெருமை சேர்த்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *