இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது!!

Date:

இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தியா இலங்கை 75 வருட ஆண்டு கால இராஜதந்திர உறவை முன்னிட்டு இந்தியாவிலிருந்து அன்புடனும் அக்கறையுடனும் எனும் தொனிப்பொருளில் கடந்த மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளது, அதற்காகவே குறித்த உலர் உணவுப் பொதிகள் மாவட்ட செயலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வேண்டு கோளுக்கு அமைவாக 750 உலர் உணவுப் பொதிகள் இன்று மாவட்ட செயலத்திற்கு அனுப்பி வைத்துள்னர்.

பெறுமதியான இவ் உலர் உணவு பொதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், கணக்காளர் எம்.வினோத் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி...

கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகுமார் மஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்...

பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புகிறது

கிருஷ்ணகுமார் இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு...