ஈஸ்டர் தின தாக்குதல்: குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக பிள்ளையான் அழைப்பு

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அழைத்துள்ளது.

இது, சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்படத்தின் விவரங்களைப் பற்றிய வாக்குமூலத்தை பெறும் நோக்கிலானது. 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆவணப்படத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில், சிஐடி கடந்த ஆண்டு விசாரணையை ஆரம்பித்தது.

பிரித்தானிய ஊடகத்தில் ஆசாத் மௌலானா வழங்கிய அறிக்கைகளின் அடிப்படையில் சமூக அமைப்பு ஒன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தன், ஆவணப்படத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதைப் பற்றி இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய...

மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த...

புதிய கட்டிடம் திறந்து வைப்பு

சம்மாந்துறை நில அளவை திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வு...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப்...