ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு!

Date:

மட்டக்களப்பில் “ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் – செயற்திறனான முதுமைப் பருவம்” எனும் தொனிப்பொருளில் செயலமர்வொன்று உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து முதியோர்களுக்கான ஒரு நாள் செயலமர்வை நடாத்தினர்.அரச, அரச சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் பிரிவுகளில் தொழில் புரியும் அலுவலர்கள் ஓய்வுக்குத் தயாராகும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறைத்தல் சமூகமயமாதல் மற்றும் முதுமைப் படுவத்தினை செயற்றிறனாக எதிர் கொள்ளுதல் போன்ற விடயங்களை இலக்காகக் கொண்ட செயலமர்வாக இது அமைந்திருந்தது.

மாவட்டத்தில் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமையாற்றி ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியத்தியத்திற்கு தயாராகும் தெரிவு செய்யப்பட்ட அலுவலகங்களுக்கான ஓய்வூதிய காலத்தில் உடலியல்- உளவியல் நலம், ETF, EPF பெற்றுக் கொள்வதற்கான சுய கோவை தயார்படுத்தல், திட்டமிடப்பட்ட முதுமைப்பருவம் தொடர்பான தெளிவூட்டல்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.சிறிதரன், தொழிற்துறை உத்தியோகத்தர் கே. கணேசமூர்த்தி, ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜ் ஆகியோரால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான திருமதி துஷியந்தி, திருமதி தட்ஷாயினி, மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கோனேஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...