சட்டவிரோதமாக மதுபானங்களை இயங்கி வரும் நிலையத்தை பிடிப்பதற்காக தோணியில் சென்ற நான்கு பொலிஸார் வாவிக்குள் விழுந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பொலிஸ் பொறுப்பதிகாரியின் வசமிருந்த ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்கள் கொண்ட ஒரு மெகசின் ஏரியில் விழுந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொனாடுவட்டுவன குளத்தின் மறுபுறத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உதய குமார உட்பட நான்கு அதிகாரிகள் குறித்த சோதனையில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், துப்பாக்கி மற்றும் ரவைகளை கண்டுபிடிக்க அம்பாறை கடற்படைத் தளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.