காதலியை தேடிவந்த காதலன் கைது

Date:

டிக்டொக் செயலி மூலம் காதலித்த காதலியை தேடிவந்த திருகோணமலையை சேர்ந்த காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டம், அக்கரபத்தனை, பசுமலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவியொருவரும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து காதலியின் வீட்டுக்கு சென்ற காதலன் பொலிஸாரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவி தந்தையை இழந்தவர் எனவும், அவரின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், சித்தப்பாவின் பராமரிப்பிலேயே
இருந்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவியின் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞனின் நடத்தை தொடர்பில் பிரதேச மக்களுக்கு சந்தேகம் ஏற்பட அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதற்;கமைய, இளைஞரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இளைஞனிடம் அடையாள அட்டை இல்லதாருப்பதும் தகவல் வழங்கலிலும் தடுமாற்றம் இருப்பதை அறிந்து அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரை இன்று (24) நுவரெலியா நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...