
மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி, ஸாவியா வீதி, ஜீ.எஸ்.லேனிலுள்ள வீட்டில் நேற்று இரவு (9) திடீரென மின்மானி வெடித்துள்ளது .
இந்தச் சம்பவம் பாரிய சத்தத்துடன் ஏற்பட்டு தீப்பரவல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் அத்தியட்சகருடன் உடனடியாக தொடர்பு கொண்ட மக்கள், அப்பகுதியில் எந்த அனர்த்தமும் நிகழாமல் பாதுகாத்துள்ளனர் .
அதன்பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் தீ இன்னும் பல இடங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.
தீ பரவலை தடுக்க விரைவாக நடவடிக்கை எடுத்தமைக்காக மின்சார சபை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.