காத்தான்குடி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு!!

காத்தான்குடி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற லருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு (14) கடற்கரை றையான் கார்டன் இல் இடம்பெற்றது.

நலன்புரிச்சங்க தலைவரும் காத்தான்குடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளருமான திருமதி தனூஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் யூ. உதயஶ்ரீதர், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கணக்காளர் சித்ரா, நிருவாக உத்தியோகத்தர் ஏ.ரவூப் மற்றும் செயலக உத் தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இடமாற்றம் பெற்றுச் சென்ற , ஓய்வுபெற்ற மற்றும் கல்விச்சாதனை படைத்த உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் இந்நிகழ்வி்ல் நினைவுச்எின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடல், நாடகம், கவிதை மற்றும் கலை நிகழ்வுகள், சிறுவர்களின் நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *