கிட்டங்கி வீதி வெள்ள நீர் பரவல்-போக்குவரத்து பாதுகாப்புடன் நடை முறை

Date:

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் -கிட்டங்கி வீதியில்ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்ல வேண்டுமென தெரவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாய்வதால் இன்று (21)
போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பாய்வதுடன் கல்முனை சேனைக்குடியிருப்பு நாவிதன்வெளி சவளக்கடை பிரதேசங்களை தரை வழியாக இணைக்கின்ற கிட்டங்கி பாலாமானது அதிகரித்த ஆற்றின் நீர்மட்டம் காரணமாக இராணுவம் பொலிஸார் நாவிதன்வெளி பிரதேச செயலகம் பிரதேச சபை அனர்த்த முகாமைத்துவ குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது தவிர கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணி இரண்டு நாட்களாக அப்பகுதி ஊடாக பயணம் செய்கின்ற அரச மற்றும் தனியார் அதிகாரிகள் மாணவர்களை பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு உதவி செய்வதுடன் தன்னார்வமாக தனது சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் அப்பகுதியில் பயணம் செய்ய சிரமப்படும் பொதுமக்களை இனங்கண்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை காண முடிகின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் வெள்ளம் பரவலாக காணப்படுவதுடன் சில இடங்களில் வடிந்தோடி காணப்படுகின்றது. தினமும்
விவசாயிகள்இ அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கையை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால்
நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...