கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது குழந்தை பலி

Date:

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை வீட்டின் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் பெண் குழந்தை மரணமடைந்துள்ளது.

குழந்தையின் தந்தை கல்முனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில், வீட்டில் தாயுடன் இருந்த 2 வயதான பெண் குழந்தையே வெளியில் விளையாடிக் கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளது.

அயலவர்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் ஜனாசா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் இ ஏறாவூர் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீரினால் மரண விசாரணை நடத்தப்பட்டு கிணற்று நீரில் வீழ்ந்து ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...