கொக்கட்டிச்சோலையில் தமிழரசுக்கட்சியின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்வு

Date:


இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 75து அண்டு நிறைவு விழா கொக்கட்டிச்சோலையில் நடைபெற்றது.
பிரதேச கிளையின் தலைவர் செ.புஸ்பலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் பொ.நேசதுரை, கடந்த பாராளுமன்ற தேர்தலின் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட அருளம்பலம் கருணாகரன் மற்றும், பிரதேச வாலிபர் முன்னணி தலைவர், பிரதேச மகளீரணி தலைவி, மகளீரணி உறுப்பினர்கள், வட்டார கிளைகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் கடந்துவந்த பாதை அதன் செயற்பாடுகள் தொடர்பில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...