சிறப்பாக நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா

Date:


மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய விழா இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய இந்த விழாவானது மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (07) இடம் பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் ஜி பிரணவன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
பாரம்பரிய முறையில் மங்கல விளக்கேற்றி தமிழ் தாய் வாழ்த்துப்பாடி இந் நிகழ்வு ஆரம்பமாகியது.
இதன் போது பாடல் இசைத்தல், இலக்கிய விமர்சனம், சிறுகதையாக்கம், பேச்சு, நடனம், கவிதை, கட்டுரை, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கும் கௌரவிப்புகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவருபரஞ்சினி முகுந்தன், கிழக்கு மாகண கலாசார பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்களான எம்.எ.சி. ஜெய்னுலாப்தீன், மற்றும் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சிறார்களுக்கு கலை, கலாசார, இலக்கியம் தொடர்பான போட்டிகளின் மூலம் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க முடிவதுடன் தேசிய மட்டத்திலும் இவர்கள் வெற்றி பெற வேண்டும் என அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...