சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை பயன்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Date:

மட்டக்களப்பில்  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு ஒல்லாந்தர் கோட்டையை பயன்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (12) இடம் பெற்றது.

மாவட்டத்தின் புராதன சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒல்லாந்தர் கோட்டையினைப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு  சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு தேவையான செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மாவட்டத்திற்கு தேவையான  நூதனசாலை ஒன்றை அமைத்தல், ஒல்லாந்தர் கோட்டைக்கான  இணையத்தளம் உருவாக்கம்,  விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர்களினால் சுற்றுலா பயணிகளின் உருவங்களை வரைதல் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம், பாரம்பரிய உணவகம் அமைத்தல் போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி  மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், மாநகர சபை பெறியியளாலர் சித்திராதேவி, வைத்தியர்கள், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், துறைசார் நிபுணர்கள், அரச சார்பற்ற பிரதி நிதிகள்,  சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மதனா தயாகரன் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிகாரிகள் புராதன  ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை

கிருஷ்ணகுமார் பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும்...

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...