தளவாயில் வீட்டுத்திட்டமும் பள்ளிவாயலும் திறந்துவைப்பு

Date:


மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் அமைக்கப்பட்ட அந்நூர் வீட்டுத்திட்டமும் பள்ளிவாயலும் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பைத்துஸ் ஸக்காத் அமைப்பின் ஒழுங்கமைப்பில் குவைத் நாட்டின் அந்நஜாத் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் இலங்கையின் சமூக சேவைப்பரப்பில் தொழிற்படும் அந்நூர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த வீடமைப்பு மற்றும் பள்ளிவாயல் அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

தளவாய் பிரதேசத்தில் ஏறாவூர் பைத்துஸ் ஸக்காத் அமைப்பினால் வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட பள்ளிவாயல், மற்றும் பாடசாலைக்கட்டிடம் என்பவை அடங்கலாக 30 வீடுகளைக்கொண்டதாக இந்த இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் குவைட் மற்றும் உள்நாட்டில் நாட்டில் செயற்படும் தொண்டு நிறுவனப்பிரதிநிதிகளுடன் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் விசேட அழைப்பின் பேரில் கலந்து சிறப்பித்தார்கள்.

குறித்த வீட்டுத்திட்டம் அமைவதற்காக மிக அவசியமாக இருந்த வீதி அமைப்புப்பணிகளை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக அலி ஸாஹிர் மௌலானா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த பகுதியில் மேலும் 100 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத்திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்க குறித்த நிறுவனங்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...