மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியில் பூட்டப்படிருந்த வீடொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் வியாழக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் ஏறாவூர் மிச்நகர் பொது சுகாதார பரிசோதகராக (Public Health Inspector) கடமையாற்றி ஒருவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் மீட்க்கப்பட்ட வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் மற்றும் சொகோ தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.