பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்துவில்-விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானையொன்று இன்று(17) காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.