மட்டக்களப்பில் இடம் பெற்ற மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு!!

Date:

சர்வதேச மனித உரிமைகள் தினம் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வொன்று இன்று (12) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு சமூக வலுவூட்டல் அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ (YMCA) மண்டபத்தில் குறித்த தெளிவூட்டல் செயலமர்வு இடம் பெற்றது.

மனித உரிமைகள் தினத்தை ஒட்டி மனித உரிமை கல்வி தொடர்பாக இடம் பெற்ற குறித்த தெளிவூட்டல் செயலமர்வானது மட்டக்களப்பு சமூக வலுவூட்டல் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் எம்.ரகுநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு வளவாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அம்பாரை மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஹிசைடீன், சமூக செயற்பாட்டாளர் கலாநிதி செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வளவாண்மை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் கதிர் பாரதிதாசன், தொழிலதிபர்மோ.சுதாகரன் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், காலை 9.30 மணி தொடக்கம் பி.ப 12.30 வரை இடம் பெற்ற செயலமர்வில் பயனாளிகளாக இளைஞர் யுவதிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...