மட்டக்களப்பில் சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தின நிகழ்வு!!

Date:

மட்டக்களப்பில் சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தின நிகழ்வானது விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்சி திட்ட அதிகாரி இந்துமதி ஹரிகரதாமோதரன் பணிப்பாளர் தலைமையில் கல்லடி தனியார் விடுதியில் (14) இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.

டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி சர்வதேச மாண்புடன் கூடிய மாதவிடாய் தினம் உலகலாவிய ரீதியில் நினைவு கூறப்பட்டு வருகின்றது.

“மாண்புடன் கூடிய மாதவிடாயை நிலைநிறுத்துவதற்கு பாலியல் உற்பத்தி சுகாதார உரிமைகளே அடிப்படை எனும் தொனிப்பொருளில்” இந் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது பாடசாலை மாணவிகள் மற்றும் தொழில் புரியும் மாதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

பெண்களுக்கான மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை மீறுகின்ற சந்தர்ப்பங்கள் என்பது இதன் போது சுட்டிக் காட்டப்பட்டதுடன் பெண்களின் உரிமைகளைப் பெற்று அனுபவித்து வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பாக இதன் போது சுட்டிக் காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு, சிறுபராய திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் போன்ற பல விடயங்கள் இதன் போது வெளிக்காட்டப்பட்டது.

இந் நிகழ்வில் மீள்பாவிப்பிற்குரிய அணையாடை (Pad) தொடர்பான விளக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு அணையாடையினை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் வைத்திய அதிகாரி திருமதி ஜூடி ஜெயக்குமார் சகாயதர்ஷினி, விழுது ஆற்றல் மேம்பாட்டுமைய நிர்வாக உத்தியோகத்தர் கந்தன் நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...