மட்டக்களப்பில் சீன தூதுவர் –உலர் உணவுப்பொதிகளும் வழங்கிவைப்பு

Date:


இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சீன நாட்டு அரசாங்கத்தின் நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுனர் இலங்கைக்கான சீன தூதுவரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள புதிய மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான சீன தூதுவர் குயி சேகன்ஹோங் கலந்துகொண்துடன் சீனதூதரகத்தின் பிரதம அரசியல் பிரிவிற்கான அதிகாரி குயின் லிஹோன்,மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சிறிக்காந்த்,திருமதி முகுந்தன் மற்றும் தூதரக அதிகாரிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 770 குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் வழங்கிவைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி...

கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகுமார் மஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்...

பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புகிறது

கிருஷ்ணகுமார் இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு...