மட்டக்களப்பு நாவலடியில் உணர்வூர்வமாக நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

Date:


சுனாமி அனர்த்தம் இடம் பெற்று இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ளதனை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.
இலங்கையில் மிக உயரமான சுனாமி நினைவுத்தூபியை கொண்டிருப்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்ததின்போது அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட கிராமம் என்ற நிலையில் உள்ள மட்டக்களப்பு நாவலடி சுனாமி தூபியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நாவலடி சுனாமி நினைவுக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாவலடி சித்திவிநாயகர் ஆலயத்தில் காலையில் விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து சுனாமி நினைவுத்தூபியில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது விசேட ஆத்மசாந்தி பூஜைகள் நடைபெற்றதுடன் உயிர்நீர்த்த உறவுகளினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாவலடி கடற்கரையில் ஆத்மசாந்திக்காக விசேடபூஜைகள் நடைபெற்று தமது உறவுகளின் ஆதம்சாந்திக்கான வழிபாடுகளும் கிரியைகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் அருட்தந்தையர்களான ஜோசப்மேரி,க.ஜெகதாஸ் அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பூ.பிரசாந்தன்,இரா.துரைரெட்னம்,முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோன்று மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வூர்வுமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு நாவலடி,புதுமுகத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 1100க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...