
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தை தடுத்தல் மற்றும் பாதிப்பை குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் ஏற்பாட்டில் சர்வோதயா மண்டபத்தில் இன்று (12) இடம் பெற்றது.
மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்கான பிரதான காரணங்கள் பற்றிய விளக்கங்கள் தொடர்பாக கலந்துரையாடல் துறைசார் நிபுணர்களினால் இதன் போது தெளிவூட்டப்பட்டது.
மாவட்டத்திற்கான பிரதான நீர்வரத்துக்களாக மாதுரு ஓயா, முந்தானையாறு, மகிழவெட்டுவான்ஆறு, ஆந்தல் ஓயா ஆகிய நீர் வழித்தடங்களினுடாக பெருக்கெடுத்து வரும் மழை நீரினால் வெள்ளம் ஏற்பட்டமைக்கான பிரதான காரணமாக காணப்படுவதாக
நிர்பாசன பணிப்பாளாரினால் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.மாவட்டத்தில் தாழ்நிலங்களை அடையாளப்படுத்தி அவற்றில் வாழும் மக்களிற்கு வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை ஆயத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
களப்புகளில் படிந்துள்ள படிமங்களை அகற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பாக துறைசார் நிபுணர்களினால் சுட்டிக் காட்டப்பட்டதுடன் வெள்ள நீரை தேக்கி பிடிப்பதற்கான புதிய குளங்கள் ( மகிழவட்டுவான் குளம், கண்டியனாறு குள விஸ்தீரணம்) மற்றும் அணைக்கட்டுக்களை அமைப்பதற்காக சாத்தியவளம் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் கித்துள் உறுகாமம் இணைப்பு திட்டம் ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் (2016) மேற்கொண்ட நிலையில் நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்க இருந்த வேளையில் அதில் உள்ள தாமதங்களை விரைவுபடுத்துதல்
மேலும் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படுத்துவதற்கு எதுவான காரணியாக கிரான் பிரதேசத்தில் வெள்ள நீர் வழிந்தொடுவதற்கு தடையாக காணப்படும் விடயங்கள் தொடர்பாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் பாதிப்புக்களை குறைப்பதற்கான மாற்று உபாயங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், நீர்ப்பாசன பணிப்பாளர், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர், வி.ராஜகோலசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கிருபா ராஜரத்தினம், எமது குழுமத்தின் வளவாளர் அக்சயன்,பொறியியலாளர்கள் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.





