மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவலடியில் 80 வயதுடைய வயோதிபருக்கு சொந்தமான சில்லறை கடையில் திருடர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
கடையில் அதிகாலை வேளையில் புகுந்த திருடர்கள் அங்கு இருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் திருடி சென்று உள்ளனர்.
கடையில் கிடைக்கின்ற வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி சென்ற வயோதிபர் நிர்கதி நிலைக்கு உள்ளாகி உள்ளார்.
இது தொடர்பில் வாழைசேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.