மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதுடன் கால்நடைகளையும், வேட்டையாடி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், புதன்கிழமை (15) அமிர்தகழி தீப்பாலத்திற்கு அருகாமையில் உள்ள வாவியில் பசுவொலன்றை முதலை பிடித்து செல்லும் காட்சி அப்பகுதி மீனவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.