மட்டக்கள்பபு மாவட்டத்தின் வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரால் வாகரை அம்மந்தன்வெளி பகுதியிலிருந்து இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தயாரிப்பான இந்த துப்பாக்கியை வைத்திருந்த 26வயதுடைய ஒருவரையும் கைதுசெய்துள்ளதுள்ள விசேட அதிரடிப்படையினர் அவற்றினை வாகரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
வாகரையில் துப்பாக்கிவைத்திருந்த ஒருவர் கைது
Date: