வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (03) மாலை, ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்னால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதியில் சென்ற இரு ஓட்டோக்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த மூவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திற்கு சென்ற வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.