வாழைச்சேனை நீதிமன்றில் கொள்ளை விசாரணைகள் ஆரம்பம்

Date:

மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனையில் சான்றுப் பொருட்கள் வைக்குமிடத்தில் நேற்று செவ்வாய் கிழமை மாலையன்று (10.12.2024) திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் நீதிமன்ற காவலாளி ஆகியோர்கள் கடமையில் இருந்த போது குறித்த வளாகத்தில் உள் நுழைந்த திருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் தப்பி ஓடியுள்ளதாக தெரிவித்தனர்.பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையொன்றில் சத்தம் கேட்டதனை தொடர்ந்து சத்தம் கேட்ட அiறியினை நோக்கி சென்ற காவலாளிகளை கண்டு திருடன் தப்பி ஓடியுள்ளான்.இதன் போது அறையின் கதவு திறந்து காணப்பட்டுள்ளது.

உடனே குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பதில் பொலிஸ் பரிசோதகரின் கவனத்திற்கு விடயத்தினை தெரியப்படுத்தியதனை அடுத்து நீதிமன்ற சான்றுப் பொருட்க்கள் வளாக பொறுப்பதிகாரி வரவழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது அங்கு வைக்கப்பட்டிருந்த மதுபானபோத்தல்கள் அடங்கிய பெட்டிகள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.குறித்த வளாகத்தில் முன்பும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...