அறிவுக்களஞ்சியப் புகழ் மர்ஹூம் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Date:

பாறுக் ஷிஹான்

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஆதரவில் ஏ.ஆர்.எம். அர்ட்வடைசிங் அனுசரணையில் சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் அறிவுக்களஞ்சியப் புகழ் அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், றிஸாலத் இணைய தொலைக்காட்சியின் சேவை விஸ்தரிப்பும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வரவேற்பு மண்டபத்தில் இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றிய தலைவர் ஒலி/ஒளிபரப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். யாக்கூப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் அமைப்பு பேரவை உறுப்பினருமான, அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக்குழு தலைவர் ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டார்.

மேலும், அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டு ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஊடக, சமூக, கல்வி, அரசியல் செயற்பாடுகள், சேவைகள் தொடர்பில் இங்கு நினைவுரை நிகழ்த்தினர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம். ஹனீபா, அம்பாறை பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், பிறை வானொலி பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். தாஜ் உட்பட அரசியல் பிரதிநிதிகள், கல்விமான்கள், ஊடக ஆளுமைகள், இலக்கியவாதிகள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊடக மற்றும் இலக்கிய அதிதிகள் பலரும் சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் அறிவுக்களஞ்சியப் புகழ் அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் ஊடக, சமூக, கல்வி, அரசியல் செயற்பாடுகள், சேவைகள் தொடர்பில் இங்கு நினைவுரை நிகழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...