பாறுக் ஷிஹான்
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வுகள் இன்று (04) இடம்பெற்றன.

கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியக்கீதம் இசைக்கப்பட்டது.
அத்துடன், தேசத்தைக்கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பிலும் அதற்கு நாம் ஆற்ற வேண்டிய கடப்பாடு தொடர்பிலும் பிரதேச செயலாளரினால் தெளிவூட்டப்பட்டது.

மேலும் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் .பளீல், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர் , சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக வளாகத்தில் மரம் நடுகையும் மேற்கொள்ளப்பட்டமையுடன் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல் யாஸீன் பாவா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தன.
