கல்முனை மாநகரில் 77வது சுதந்திர தின நிகழ்வு

Date:

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த 77வது தேசிய சுதந்திர தின விழா இன்று (04) கல்முனை வாசலில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பேரவை உறுப்பினரும் திகாமடுல்ல மாவட்ட பிரதேச அபிவிருத்திக்குழுத்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இதன் போது, கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம். எம்.அன்சார், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.ஆசிக், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர், அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரும் மாநகர சபையின் பிரதி ஆணையாளருமான ஏ.எஸ்.எம்.அஸீம், கல்முனை மாநகர பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜெளஸி,கல்முனை சாய்ந்தமருது வர்த்தக சங்கங்களின் பிரமுகர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.

மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம்.ராபி அவர்களின் நன்றியுரை நிகழ்வுடன் இறுதியாக கல்முனை சாஹிறா தேசியக்கல்லூரி, இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம், கல்முனை வெஸ்லி உயர்தரப்பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

காரைதீவு பிரதேச சபையின் கன்னி அமர்வு

காரைதீவு  பிரதேச சபையின்   04 ஆவது சபையின் 1 ஆவது...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று...

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...