கற்றாழை கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

Date:

  பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட அன்னையர் ஆதரவு குழுவினருக்கான கற்றாழை கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(6) இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி ஷகீலா இஸ்ஸதீன் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வானது இயற்கை வேளாண்மை வழிமுறையை பரப்புவதை இலக்காக கொண்டு நடைபெற்றது.

மேலும் இந்தக் கற்றாழைக் கன்றுகளை அன்னையர் ஆதரவு குழு உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் நட்டு பாதுகாக்க வேண்டும் என்பதுடன் கற்றாழை வளர்ப்பு முறைகள், நீர் பாதுகாப்பு மற்றும் உரமளிப்பு தொடர்பான அறிவுரைகளும் Nature farming plantation Pvt அமைப்பின் உறுப்பினர்களால் ஒவ்வொரு அன்னையர் ஆதரவுக் குழுவுக்கு பொறுப்பான பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இந்தக் கற்றாழைக் கன்றுகள் அன்னையர் ஆதரவு குழுவின் உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்இந்நிகழ்வில் அன்னையர் ஆதரவு குழு பிரிவுக்கு பொறுப்பான அனைத்து பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் கலந்து கொண்டு கன்றுகளை பெற்றுக் கொன்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...