அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்

Date:

ஆசியாவின் நான்காவது பெரிய கடல் பாறை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அருகம்பை பகுதியில் அமைந்துள்ளது நீர் சறுக்கல் உள்ளிட்ட விளையாட்டிற்கு நல்ல சூழல் இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறுகம்பை விரிகுடா சுற்றுலாப் பகுதியை விரும்புகிறார்கள்.

அடுத்த வாரத்திற்குள் அருகபை விரிகுடா சுற்றுலா மண்டலம் திறக்கப்படவுள்ள நிலையில் அருகம்பை விரிகுடாவில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் 24வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த கலப்பத்தியின் வழிநடத்தில் இராணுவ வீரர்கள் அருகபை விரிகுடாவில் ஒரு நாள் கடல் சுவரை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினர்.

இதற்காக சுமார் 200 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.அதே நேரத்தில் அறுகம்பை சுற்றுலா காவல்துறை பொது சுகாதார பரிசொதகர்கள் மற்றும் பொத்துவில் பிரதேச சபை அதிகாரிகளும் இச்சுத்தம் செய்யும் செயற்பாட்டில் இணைந்திருந்தனர்.

இது தவிர தற்போது இங்கு வருகை தரும் பல சுற்றுலாப் பயணிகளும் இந்த நிகழ்வில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

24 வது படைப்பிரிவின் துணைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக 242 வது படைப்பிரிவின் தளபதி கேணல் துஷார கேலே கோரலே 14 வது லயன்ஸ் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சுரேஷ் பெரேரா மற்றும் 24 வது படைப்பிரிவின் சிவில் தொடர்பு அதிகாரி கேணல் சிசிர குமார ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

றவூப் ஹக்கீம் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மி தலைவர்

றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே...

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம்...

தமிழ் இன அழிப்பு வாரம்…

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான...

29 கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று...