மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79வது ஆண்டு கல்லூரி தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் கொடி ஏற்றப்பட்டு பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு சத்திய பிரமாணம் எடுத்த பின்னர் பாடசாலையின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் அமரர் நல்லையா மாஸ்டர் அவர்களின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தினத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை (01) காலை முன்னெடுக்கப்பட்டது.

மாணவர்களை சமூக மயப்படுத்தும்வ கையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் எஸ்.பி.எம் அறக்கட்டளை ஒன்றிணைந்து இந்த செயல்த்திட்டத்தினை இன்றைய தினம் முன்னெடுத்து இருந்தது.

இதன்போது சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் பயணிக்கும் நாவலடி பகுதி கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் பணிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை

கிருஷ்ணகுமார் பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும்...

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...