சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கு

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் வசிக்கின்ற பொதுமக்களுக்கென பிரத்தியேகமாக சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கொன்று மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் திங்கட்கிழமை (10) நடத்தப்பட்டது.

மாநகர ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் தலைமையில் நடைபெற்ற சேதனப்பசளை தயாரிப்பதற்கான இலவச பயிற்சிக் கருத்தரங்கில் வளவாளர்களாக சுற்றாடல் தொழில்நுட்பத்தில் உயிர்முறைமைகள் தொழில்நுட்பமாணி சிறப்புப் பட்டம் பெற்ற எஸ்.தர்சா, ரீ.கே.டெலியா அருள்நிதி மற்றும் ஏ.அனுஜா ஆகியோர் கலந்துகொண்டு சேதனப்பசளை தயாரிப்பது தொடர்பில் நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

இக் கருத்தரங்கில் மாநகரப் பொறியியலாளர் சித்ராதேவி லிங்கேஸ்வரன், மாநகர கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் சீ.துஷ்யந்தன் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்தரங்கில் பங்குபற்றிய பயனாளிகளுக்கு சேதனப் பசளை தயாரிக்கும் கொள்கலன்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...