குருதிக் கொடை நிகழ்வு

Date:

பாறுக் ஷிஹான்

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, சனிக்கிழமை (25) மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை பாடசாலை வளாகத்தில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வை பாடசாலை அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைத்தார்.

இதில் பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் நடராஜா றமேஸ் மற்றும் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் திருமதி பி.எம்.கவிதா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும், 125ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழுவினர் மற்றும் பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் இந்த இரத்ததான முகாம் மிகுந்த வெற்றியுடன் நடைப்பெற்றது.

கார்மேல் பற்றிமா பாடசாலையின் 125ஆவது ஆண்டு விழாவை ஒட்டி, ஒரு வருடத்திற்கு மாதாந்தம் பல நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை

கிருஷ்ணகுமார் பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும்...

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...