
இலங்கையின் மிக உயரமான 64 சுதைவிக்கிரக இராஜ கோபுரத்திணையுடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் பேராலய பிரம்மோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நேற்று (03) காலை களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் ஆலத்தில் இருந்து கொடி சீலை பவனியினை யானை மீது கொடிசீலை வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ கலை நிகழ்வு பவனியுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து ஆலயத்தை வந்தடைந்த கொடிசீலைக்கு விசேட பூசை நடைபெற்று வசந்த மண்டப பூசையை தொடர் கொடிசீலை கொடிதம்பத்துக்கு கொண்டுவரப்பட்டது.

ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் உற்சவக்கிரியைகளை நடாத்தினார்கள்.
இதன்போது அபிஷேக பூசையை விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து நாத மேள பக்தர்களின் அரோகராகோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

இவ் பிரம்மோற்சமாவ பெருவிழாவின் போது புஷ்பாஞ்சலி திருவிழா, கற்பூரஜோதி திருவிழா, சதுர்வேதகோஷ திருவிழா, பஞ்சமுகஅர்ச்சனை, திராவிடதோத்திர, மாம்பழத் திருவிழா திருவேட்டை திருவிழா, இடம் பெற்று ஒன்பதாம் நாள் காலை சித்திர தேர்ரோட்டமும் அன்று மாலை தேர்ரடி திருவிழாவும் நடைபெறவுள்ளது.
சித்ரா பௌர்ணமியன்று ஆலயத்தின் புனித மொழியான பாலாறு பால புஷ்கரணியில் தீர்த்த உற்சவம் பெற உள்ளது.

கிருஷ்ணகுமார்