ஏறாவூர் நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கள்வர்கள் கைவரிசை

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு – ஏறாவூர் ரிசி குவாட்டஸ் பகுதியில் அமைந்துள்ள நாகலிங்கேஸ்வரர் ஆலயத்தின் தற்காலிக மூலஸ்தானம் உடைக்கப்பட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள் என்பன களவாடப்பட்டுள்ளதுடன், ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 01.30மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அங்கிருந்த சீசீரீவி கமராவிலும் குறித்த திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆலய மூலஸ்தானத்தினுள் இருந்த வெண்கலத்தினாலான நாக சிலை, பிள்ளயைளார் சிலை, விளக்குகள் உள்ளிட்ட பூஜைப் பொருட்களுடன் உண்டியலும் இனம் தெரியாத நபர்களினால் திருடப்படுள்ளது.
இதேவேளை ஆலயத்தில் களவாடப்பட்ட உண்டியல், ஆலயத்தின் முன் பக்க வளாகம் ஒன்றினுள் கிடப்பதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

இதுவரை திருட்டு சம்பவம் தொடர்பாக எவரும் இனம் கானப்படவில்லை என்பதுடன், இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலும் ஆலய நிர்வாகத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: தீர்ப்பு ஒத்திவைப்பு

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில்...

மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை...