கிழக்கு பல்கலைக்கழகத்தில் CIDயினர் சோதனையிட்டு விசாரணை

Date:

கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிஐடியினர் தொடர்ந்து 3 நாட்களாக 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்களை சோதனையிட்டு விசாரணைகளை கடந்த வாரம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிள்ளையான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனை கடந்த 8ஆம் திகதி அவரது கட்சி காரியாலயத்தில் வைத்து சிஐடி யினர் கைது செய்தனர்.

இதனையடுத்து குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் 23,24,25 ஆகிய மூன்று தினங்களாக கொழும்பில் இருந்து வந்த சிஐடி யினர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஒரு சில விரிவுரையாளர்களின் ஆவனங்களை சோதனை செய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...