தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம்

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபைக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை (16) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலானது சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.டீ.எச்.ஜெயலத் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல் நடவடிக்கைக்கான பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபர் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்கள், பொலித்தீன் பாவிப்பது தொடர்பில் தெளிவூட்டல் , சட்டவிரோமாக தேர்தல் போஸ்டர்கள் ஒட்டுதலை தவிர்த்தல் , தலை கவசமின்றி தேர்தல் பிரச்சாரம் செய்வதை தவிர்த்தல், சட்டவிரோதமாக ஊர்வலம் செல்வத்தை தவிர்த்தல் ,சட்டவிரோத ஒலிபெருக்கி பாவனையை குறைத்தல் தொடர்பான தெளிவூட்டலை வழங்கப்பட்டது.

மேலும் வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் போது பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் மற்றும் வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டும் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன. இது தவிர தேர்தல் தொடர்பான தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் சம்மாந்துறை பிரதேச சபையில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

றவூப் ஹக்கீம் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மி தலைவர்

றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே...

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம்...

தமிழ் இன அழிப்பு வாரம்…

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான...

29 கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று...