போலியான மருத்துவ அறிக்கைகளை வழங்கிய வைத்தியர் கைது

Date:

கிண்ணியா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், திருகோணமலை துறைமுகத்தில் பயணிகளுக்கு போலியான மருத்துவ அறிக்கைகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, பொது முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கப்பல்களில் இருந்து இறங்கும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களுக்கு மருத்துவ அனுமதி அறிக்கைகளை வழங்குவது இந்த வைத்தியரின் பொறுப்பாக இருந்தது.

ஒவ்வொரு அறிக்கைக்கும் அவருக்கு 300 அமெரிக்க டொலர்கள் கட்டணமாக வழங்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விசாரணைகளில், அவர் எந்தவொரு உண்மையான மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் இந்த அறிக்கைகளை வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த போலியான ஆவணங்களுக்காக அவர் பணம் பெற்றதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சந்தேகநபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை...

தொல். திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும்...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான...

வெள்ள நீரால் பிடிக்கப்பட்ட அதிகளவான மீன்வகைகள்

அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும்...