மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன்பாக நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவாரபுரம் பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் பிரதான வீதியை கடக்க முற்பட்ட இருவரை, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பெட்ரோல் டேங்கர் (பவுசர்) மோதியது.விபத்தின்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றைய நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவராக சித்தாண்டி முருகன் கோயில் பின்புற வீதியில் வசிக்கும் வீரக்குட்டி ரமேஷ் (வயது 39) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாகும்.உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் ஈடுபட்ட பெட்ரோல் டேங்கர் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு
Date: