
மாநகர சபையும் மட்டக்களப்பு மாநகர சபை பொதுநூலகமும் இணைந்து நடத்திய பொதுஅறிவு ஆணையளார் வெற்றிக்கிண்ணம் இறுதி பரிசளிப்பு விழா மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு மாநகர ஆணையாளர் திரு.நா.தனஞ்ஜெயன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னால் ஆணையாளர்களான ரி.அருணகிரிநாதன், சி.புண்ணியமூர்த்தி, ச.நவநீதன், மா.உதயகுமார், க.சிவநாதன், கா.சித்திரவேல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மநகரசபையின் சிவில் பொறியிலாளர், லி.சித்திராதேவி, மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர்.சி.துஸ்யந்தன், மாநகர பிரதம கணக்காளர் க.அரசரெட்ணம், நிர்வாக உத்தியோகத்தர் கிருள்சாதேவி பிறேமகுமார் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள், பொதுநூலக உத்தியோகத்தர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதில் முன்னால் ஆணையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.


கிருஷ்ணகுமார்