
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (06) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன், திருகோணமலை மாநகர மேயர் க . செல்வராஜா (சுப்ரா) கட்சியின் உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


