மீனவரின் சடலம் மீட்பு-விசாரணை முன்னெடுப்பு

Date:

நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (31) மாலை காணாமல் சென்ற குறித்த மீனவர் நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் சென்றிருந்தார்.இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி செவ்வாய்க்கிழமை (01) காலை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.குறித்த முறைப்பாட்டிற்கமைய செவ்வாய்க்கிழமை (01) குறித்த காணாமல் சென்ற மீனவரின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (01) பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் சென்ற மீனவரின் சடலம் நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை – பாண்டிருப்பு செல்லப்பா வீதி பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றி வேல் (பெரிய தம்பி) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

அத்துடன் மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ.ஐ.கா.ஸ்தாப‌க‌ த‌லைவ‌ரின் மே தின வாழ்த்துச்செய்தி

மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக...

எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே JVPயின் வேட்பாளர்களாக இணைந்துள்ளனர்

தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆசனம் கேட்டு கெஞ்சி நின்று எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே...

மயிலத்தமடு நிலப்பிரச்சினை: விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி...

சுயேட்சை குழு தலைவர் நஸாரின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச...