மீன்பிடிக்கச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு வாகரை பகுதியில் மீன்பிடிக்கச்சென்றுவந்த குடும்பம் ஒன்றின் மூன்று பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வாகரை,கறுவாச்சேனை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று திரும்பிய நிலையில் குளத்தில் மூழ்கியே உயிரிழந்துள்ளனர்.
குளத்தின் ஆழமான பகுதியில் மூழ்கிய நிலையிலேயே சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதிக்கு சென்ற வாகரை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குளத்தில் இருந்த குழியில் மூழ்கி 10 -12 . வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர் இதில் மூவரில் இரண்டு சிறுவர்களும் , ஒரு சிறுமியும் உள்ளடங்குவதாக வாகரை பொலிஸார்
கிருஷ்ணகுமார்
