முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான  ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகள்

Date:

பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கான ஆரோக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் முன்பள்ளிகளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்தல் தொடர்பான அறிமுக நிகழ்வு இன்று (3) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

இதன் போது முன்பள்ளிப் பாடசாலைகளை சுகாதார மேம்பாடுடைய பாடசாலைகளாக மாற்றுவது சம்பந்தமாகவும் , அனைத்து முன்பள்ளி பாடசாலைகளையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்வதன் நன்மைகள் மற்றும் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டது.

இக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின்
சுகாதார கல்வி அதிகாரி எம்.ஜெ. பைறுஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களான
உளவள ஆலோசகர், முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தாதிய சகோதரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார மருத்துவமாதுக்கள் பாடசாலை பற் சிகிச்சையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை

கிருஷ்ணகுமார் பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும்...

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...