உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேசத்தில் போட்டியிடும் கட்சிகளில் அகிம்சை முறையை பின்பற்றி தமிழரசுக் கட்சியினைத் தவிர மற்றைய கட்சிகள் அனைத்தும் ஆயுதக் குழுவாக இருந்து ஜனநாயக முறைக்கு அமைய கட்சியாக மாற்றியவர்கள்.
தேர்தல் பரப்புரைகள் ஆரம்பித்து இருக்கும் இந்த நாட்களில் எமது அகிம்சை முறையை பின்பற்றும் எமது கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அச்சுறுத்தலாக வேட்பாளர்களுக்கு எதிராக பெட்ரோல் குண்டு வேட்பாளரின் வீட்டில் வீசப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பல சம்பவங்கள் பல இடங்களில் எமது கட்சிக்கு வேட்பாளருக்கும் எதிராக இடம்பெற்று வருகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையாளர் இவ்வாறான அக்கிரமங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான அநீதியான விடயங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.