ஜப்பான் ஆதரவில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு

Date:

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதுடன், ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா நேற்று மாலை (22.01.2025) மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

தூதுவருடனான அதிகாரிகள் குழுவினர், மட்டக்களப்பில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் சமய தலங்களை பார்வையிட்டதோடு, குறிப்பாக மிகவும் பழமை வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையை சிறப்பாக ஆராய்ந்தனர்.

பார்வையின் போது, தூதுவர் மட்டக்களப்பின் பிரத்தியேகங்களையும் சிறப்பம்சங்களையும் குறித்து கேட்டறிந்து கொண்டதோடு, இவ்விஜயத்தால் அவர் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், தூதுவர் மற்றும் குழுவினர் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்ததோடு, அங்குள்ள பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று...

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...