ஜப்பான் ஆதரவில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு

Date:

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதுடன், ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா நேற்று மாலை (22.01.2025) மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

தூதுவருடனான அதிகாரிகள் குழுவினர், மட்டக்களப்பில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள் மற்றும் சமய தலங்களை பார்வையிட்டதோடு, குறிப்பாக மிகவும் பழமை வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையை சிறப்பாக ஆராய்ந்தனர்.

பார்வையின் போது, தூதுவர் மட்டக்களப்பின் பிரத்தியேகங்களையும் சிறப்பம்சங்களையும் குறித்து கேட்டறிந்து கொண்டதோடு, இவ்விஜயத்தால் அவர் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், தூதுவர் மற்றும் குழுவினர் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஜயம் செய்திருந்ததோடு, அங்குள்ள பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...