வலயக்கல்வி அலுவலக வீதி புனரமைப்பு

Date:

இலங்கையின் கல்வித்துறையில் முன்னேற்றகரமான பல சாதனைகளை தொடர்ந்தும் நிலைநாட்டி தேசிய ரீதியில் சிறந்த கல்வி வலயங்களில் ஒன்றான கல்முனை கல்வி வலயத்தின் பணிமனை அமைந்துள்ள “வலயக்கல்வி அலுவலக வீதி” பாவனைக்கு பொருத்தமற்றதாக காணப்பட்டதை கவனத்தில் கொண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களினால் கொங்கிறீட் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும், நூற்றுக்கணக்கான அதிபர்களும், கல்வி அதிகாரிகளும் பயன்படுத்தும் இந்த வீதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் டீ- 100 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்டது.

இந்த கல்முனை “வலயக்கல்வி அலுவலக வீதி” நிறைவுப்பணிகளை கள விஜயம் செய்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் பார்வையிட்டார்.

இந்த விஜயத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வெகுஜன மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல். நூருல் ஹுதா உட்பட முன்னாள் எம்.பி ஹரீஸ் அவர்களின் இணைப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை பிராந்திய கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கல்முனை கல்வி வலய கல்வி எழுச்சிக்கு முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...