சொகுசு கார் யானையுடன் மோதி விபத்து

இலங்கையில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க தெரிவித்தார்.
இதன்போது, இலங்கைச் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துவது அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்கும் பரந்த சமூகத்துக்கும் அத்தியாவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசரத் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாறுக் ஷிஹான்
